மதுரையின் வாசம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்
.jpg)
நீண்ட காலமாகச் சிறுகதைகளில் செயல்பட்டு வரும் யுவன் சந்திரசேகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளை ஒற்றை அடையாளத்திற்குள் அடக்குவது எளிதன்று; தேவையானதுமல்ல. அவரது கதைகளை மொத்தமாகத் தொகுத்து வாசிக்கும் ஒருவருக்கு வெளிசார்ந்த அடையாளங்கள் கொண்ட கதைகள் எழுதியிருக்கிறார் எனச் சொல்வதும், அவை மதுரை மாவட்டப் பின்னணியில் எழுதப்பட்டிருக்கின்றன என்று சொல்வது எளிதாக சொல்லக்கூடிய ஒன்றுதான். காலகட்டத்தின் கதை இம்மாத (2024,ஜூன்)உயிர்மையில் வந்துள்ள ’நகுதற் பொருட்டு’ கதையின் நிகழ்வெளிகளாகச் சேலமும் மதுரையும் உள்ளன. ஆனால், இரண்டும் ஒன்றுபோல இடம் பெறவில்லை. சேலம் நிகழ்காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்திக் காட்டப் படுகிறது. ஆனால் மதுரை நினைக்கப்படும் வெளியாக - கடந்த கால நிகழ்வுகளின் வெளியாக விரிந்துள்ளது. நிகழ்காலத்தில் - சேலத்தில் சந்தித்த பாத்திரத்தின் வழியாகக் கடந்த காலத்திற்குள் நுழையும் கதைசொல்லி பாத்திரம், தனது மாணவப்பருவத்து நண்பர்கள் இருவரின் எதிரும் புதிருமான எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அலசிக் காட்டுவதாகக் கதையின் காட்சிகள் வந்து போகின்றன. அந்த அலசல்கள் தனிநபர்கள் இருவரின் மனப்பாங்க...